ஏன் மற்ற மத திருமணங்களில் பெண் அடிமைத்தனம் இல்லையா ? ஏன் எப்போதும் இந்து மதம் மட்டுமே உங்கள் கண்ணகளில் படுகிறது ?
இந்து மதத்தில் தான் ‘கன்னிகாதான முகூர்த்தம்’ ‘தார முகூர்த்தம்’ ‘விவாக சுப முகூர்த்தம்’ என்றுதான் திருமணங்களை குறிப்பிடுவார்கள். இவைகள் எல்லாமே பெண்களை பொருளாக, இழிவாக சித்தரிப்பவை.
பெரியார் இது பற்றி சொல்கிறார்: கன்னிகா தானம் என்பதற்குக் கன்னியைத் தானமாகக் கொடுத்து விடுவது என்று பொருள். …. தாரா முகூர்த்தம் என்றால், பெண்ணை தாரை வார்த்து தானமாகக் கொடுப்பது.
அதனால்தான் பெரியார், ‘வாழ்க்கை ஒப்பந்த விழா’ ‘வாழ்க்கை துணை நலம்’ என்று பெண்களின் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் சுயமரியாதை வாக்கியங்களை கொண்டு வந்தார். பெண்கள் கோயில், திருமணம் தவிர அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததினால்தான் பெரியார் பெண்கள் அதிகம் பங்குகொள்ளும் திருமணங்களில் பேசும் முறையை கொண்டுவந்தார்.
- நன்றி வே மதிமாறன்
இந்து மதத்தில் தான் திருமணத்தை அல்லது வாழ்க்கை ஒப்பந்தத்தை பெண் அடிமைத்தனத்தை குறிக்கும் சொல்லாடல்கள் அப்பட்டமாக இடம்பெறுகின்றன.

No comments:
Post a Comment